திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சிவப்பு சாத்து விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்
Aug 19 2017 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 7ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க சப்பரத்தில் திருவீதி உலா வரும் சிவப்பு சாத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.