திருச்சியில் உள்ள சர்க்கார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சூரிய பூஜை நடத்தப்பட்டது : ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
Aug 24 2017 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் உள்ள சர்க்கார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சூரிய பூஜை நடத்தப்பட்டது.
திருச்சி கல்லணை சாலையில் உள்ள சர்க்கார் பாளையம் கிராமத்தில் கரிகாலச்சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரிய பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வருடத்தில் வேறு எந்த நாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக மூலஸ்தனத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழும். இந்த நேரத்தில் இங்கு வழிபாடு செய்தால் திருமண தடைகள் மற்றும் நோய்கள் நீங்கி பலன் உண்டாகும் என்பது ஐதீகம். அதன்படி ஆவணி மாதம் 7 ஆம் நாளான நேற்று இங்கு சூரிய பூஜை நடைபெற்றது. நேரடியாக சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேலும் இந்த சூரிய வழிபாடு நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் இங்கு வருகை புரிகின்றனர்.