திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் 7-ம் நாளில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார் : ஆயிரக்கணக்காக பக்தர்கள் வழிபட்டனர்
Sep 30 2017 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்காக பக்தர்கள் வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அந்த வகையில் விழாவின் ஏழாம் நாளான நேற்று, கிருஷ்ணர் அலங்காரத்துடன் தங்க சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, மாட வீதிகளில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர்.