திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் திருத்ரோட்ட நிகழ்ச்சி : உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
Sep 30 2017 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று திருத்ரோட்ட நிகழ்ச்சியில், உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் தேரோட்டத்திற்காக இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர்கள் அதிகாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினர். உற்சவர்களுக்கு திருத்தேரில் தூப, நைவேத்தியங்கள் காட்டப்பட்டன. அப்போது நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேரை திரளாக கூடிநின்ற பக்தர்கள் கற்பூரம் காட்டி பக்தி முழக்கத்துடன் தரிசித்தனர்.