டெல்லியில் நடைபெற்ற தசரா விழா நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் பங்கேற்பு - ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகள், தீயூட்டப்பட்ட அம்புகளைக் கொண்டு எரிப்பு
Oct 1 2017 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி, டெல்லியில் நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகள், தீயூட்டப்பட்ட அம்புகளைக் கொண்டு எரிக்கப்பட்டன.
நவராத்திரி விழாவின் கடைசி தினமான நேற்று, ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. விழாவை துவக்கிவைத்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றேனர். இந்நிகழ்ச்சியில், ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகள், தீயூட்டப்பட்ட அம்புகளைக் கொண்டு எரிக்கப்பட்டன.
முன்னதாக, விழாவில் பங்கேற்ற ராமர், லட்சுமணன், அனுமன் வேடமிட்டவர்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஆகியோர், வெற்றித் திலகமிட்டு வாழ்த்தினர்.