திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்பு
Oct 6 2017 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தையொட்டி கருட வாகன சேவை நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி மாட வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல், நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள செளரிராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து கோயிலின் முன்பகுதியில் அமைந்துள்ள புஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.