திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேக பூஜை : ஏராளமான பக்தர்கள் வழிபாடு
Dec 7 2017 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தலமான திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில், ஆயிரத்து எட்டு சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், சந்திரனின் அம்சமாக போற்றப்படும் சங்குகளில் புனித தீர்த்தம் நிரப்பி, அதைக்கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சிவபெருமான் மனம்குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, வளமான வாழ்க்கையை அளிப்பார் என்பது பக்தர்களின் ஐதீகம். இந்நிலையில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தலமாக விளங்கும் திருச்சி திருவாணைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் ஆலயத்தில், கார்த்திகை மூன்றாவது சோமவாரமான நேற்று, உலக நன்மைக்காகவும், எல்லையற்ற இன்பங்களைப் பெற்று சுபிட்சமாக வாழவேண்டி ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எம்பெருமாளுக்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.