களைகட்டத் தொடங்கியது கிறிஸ்துமஸ் பண்டிகை : 3 நாட்களே உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களின் விற்பனை மும்முரம்
Dec 21 2017 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 3 நாட்களே உள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து நாகர்கோவிலுக்கு வரவழைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்காரப் பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயேசு கிறிஸ்து பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தப் பண்டிகைக்கு 3 நாட்களே இருக்கும் நிலையில், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கிறிஸ்துமஸ் ஸ்டார், வண்ண விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட பலவகையான அலங்காரப் பொருட்கள் நாகர்கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ளன. ஒகி புயல் தாக்கத்தால், மந்த நிலையில் இருந்த இந்த விற்பனை, தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வரவேற்கும் விதம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.