கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம் : கிராமிய முறைப்படி 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொண்டாடினர்
Dec 26 2017 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் கலியாட்டம், கோலாட்டம் முளைப்பாறி என, கிராமிய முறைப்படி 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிஸ்துமஸ் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
ஏசு கிறிஸ்து அவதரித்த தினமான நேற்று, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ பெருமக்கள் புத்தாடை அணிந்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம், தாளமுத்துநகர், சிலைபட்டி உள்ளிட்ட 12 கடற்கரை கிராமங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அக்கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தாளமுத்துநகரில் இருந்து முளைபாறி எடுத்து வர, கோலாட்டம், கலியாட்டம் மற்றும் சிலம்பம் போன்ற கிராமிய கலைகளுடன் முளைப்பாறி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முள்ளிப்பாடியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் தினம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆதரவற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடனம் இடம்பெற்றது. அதில், தொலைபேசி மூலம் சமூக வலைதலங்களில் மாணவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கும் நிலை மற்றும் தொலைபேசியா தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.