தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் : திரளாக பக்தர்கள் இறைவனுக்கு அர்ச்சனை
Jan 2 2018 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மண்வளம், மழைவளம் பெருக இறைவனை வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெருமந்தூரில் உள்ள மொளச்சூர் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம்கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளாக கலந்து கொண்ட பக்தர்கள், இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
அரியலூரில் புத்தாண்டையொட்டி உலகப்புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட அனைத்து கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனுறை ஸ்ரீ கைலாய நாதர் ஆலயத்தில் தெப்ப திருவிழா மற்றும் ஊஞ்சல் சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள பாரிமளரெங்கநாதர் ஆலயத்தின் ஏகாதேசி பெருவிழாவின் 4ம் நாள் திருவிழாவான நேற்று, பெருமாள் ரெத்தின அங்கி அலங்காரத்தில், பரமபதவாசல் வழியே எழுந்தருளி, வீதியுலா சேவை செய்தார்.
வேலூரில் உள்ள திரௌபதியமன்ன் சமேத தருமராஜா திருக்கோயிலில் உலக அமைதி மற்றும் வறட்சி நீங்க வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு வடாரண்யேசுவரர் திருக்கோயிலில் ஆருத்ரா மஹாஅபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில், உரூஸ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு வழிபட்டனர்.