தை அமாவாசயையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Jan 17 2018 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தை அமாவாசயையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தை அமாவாசயையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏகாம்பரநாதர் கோவில், திருப்புட்குழியில் உள்ள விஜயராகவப் பெருமாள் கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதேபோல், ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு ஏராளமான வாசனை திரவியங்கலால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து அன்னாபிஷேக கோலத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.