நாகூர் தர்காவின் 461-வது கந்தூரிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்புத் தொழுகை
Feb 18 2018 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 461வது கந்தூரிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில்
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்புத் தொழுகை நடத்தினர்.
நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. பல்வேறு சமயத்தவரும் வந்து வழிபட்டு செல்லும் புகழ்பெற்ற இந்த தர்காவின் 461வது ஆண்டு கந்தூரி பெருவிழா
நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக, நாகப்பட்டினத்திலிருந்து, அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் கொடி ஊர்வலம் நடைபெற்றது. கொடிகள் முக்கிய வீதிகள் வழியாக நாகூரை வந்தடைந்த பின் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தர்காவின் 5 மனோராக்களிலும், ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, வண்ணமிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான, நாகூர் ஆண்டவர் சந்நதிக்கு சந்தனம் பூசும் வைபவம் 26ம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.