நாடு முழுவதும் மகாவீரர் ஜெயந்தி : சமண சமயத்தை சேர்ந்த ஏராளமானோர் உற்சாகத்துடன் கொண்டாட்டம்
Mar 29 2018 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தியை சமண சமயத்தை சேர்ந்த ஏராளமானோர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
மகாவீரர் ஜெயந்தியையொட்டி திருச்சியில் வசிக்கும் சமண சமயத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் மகாவீரரின் பாடல்களை போற்றி பாடியும், அவரது புகழைப் பரப்பும் விதமாகவும் மகாவீரரின் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. ஜெயின் ஆலயத்திலிருந்து துவங்கி மலைக்கோட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக இந்த ஊர்வலம் சென்றது.
ஈரோடு இந்திரா நகரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் ஒன்றுகூடி ஊர்வலமாகச் சென்று பிறரை வாழ விடு, கோபம் மேலும் கோபத்தை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட மகாவீரர் போதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் எடுத்துரைத்தனர்.
நெல்லையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான ஜெயின் மக்கள் கலந்து கொண்டனர். மகாவீர் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மகாவீரரின் போதனைகள் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜெயின் சமுதாயத்தினர் மகாவீர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடினர். மயிலாடுதுறை சுமதிநாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, சமூக ஒற்றுமையை வலியுறுத்தியும், அமைதி, அகிம்சையை வலியுறுத்தியும், பேரணி நடைபெற்றது. இதில் மகாவீரரின் சொரூபம் தாங்கியபடி, ஆலய வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது.
கடலூர் தேரடி வீதியில் உள்ள ஜெயின் கோவிலில் மகாவீர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் காலை சிறப்பு வழிபாடுகள் முடிந்து ஜெயின் மதத்தினை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என பலர் அமைதி ஊர்வலம் சென்றனர். பின்னர் உலக அமைதி வேண்டியும் வாழ் வாழவிடு என்ற மகாவீரரின் கொள்கை நிறைவேற சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.