ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகா சமாதியின் 100வது ஆண்டு விழா : சாய்பாபாவுக்கு 3,006 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம்
Mar 30 2018 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகா சமாதியின் 100 வது ஆண்டு தினத்தையொட்டி கன்னியாகுமரி பொற்றையடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சாய்பாபா கோவிலில் அவரது திருவுருவ சிலைக்கு 3 ஆயிரத்து 6 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா மகாசமாதி அடைந்த 100 வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் அவரது பக்தர்கள் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில், விழாவை முன்னிட்டு காலையில் பௌர்ணமி சங்கல்ப யாகம் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து காலை ஆர்த்தி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பின்னர் கோவிலில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு 3 ஆயிரத்து 6 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.
பால் அபிஷேகத்தை தொடர்ந்து பல்வேறு வகையான களபம், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் போன்ற பொருட்களாலும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான சாய்பாபா பக்தர்கள் கலந்து கொண்டனர்.