கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா அனைத்து இன்னல்களிலும் இருந்து விடுபட்டு, தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட வேண்டியும், துணைப்பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் எதிரிகளை முறியடித்து வெற்றிபெற வேண்டியும் கழகம் சார்பில் ஆலயத்தில் சிறப்பு யாகம் - அபிஷேக ஆராதனை
Apr 3 2018 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, அனைத்து இன்னல்களிலும் இருந்து விடுபட்டு, தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட வேண்டியும், துணைப்பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், எதிரிகளை முறியடித்து வெற்றிபெற வேண்டியும் கழகம் சார்பில், நாகை உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, அனைத்து இன்னல்களிலும் இருந்து விடுபட்டு தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சியை ஏற்படுத்திட வேண்டியும், பூரண உடல்நலம் பெற வேண்டியும் மயிலாடுதுறை வடக்கு ஒன்றியக்கழகம் சார்பில், மங்கை மடத்தை அடுத்த திருக் குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் அபிஷேக, ஆராதனைகள், அஷ்டோத்திர பூஜை, சுவாதி நட்சத்திர சுதர்ஸன மஹாயாகம் ஆகியவை நடைபெற்றது.
இதேபோல், கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் எதிரிகளை முறியடித்து, வெற்றி பெற வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது.
வழிபாட்டைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்கழக செயலாளர் திரு. பா.ராஜீ மற்றும் திரளான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.