திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடிநீர் தட்டுப்பாடு : பக்தர்கள் பெரும் வேதனை
May 15 2018 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ்கடவுளான முருகக்கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது, கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வருகை தருவதால், கூட்டம் இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான இடத்தில், முறையாக குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துகொடுக்கவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.