ராமநாதபுரத்தில் வனபேச்சியம்மன் கோவில் திருவிழா : மாட்டு வண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
May 16 2018 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபரம் மாவட்டம் கடலாடியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் உள்ள வனபேச்சியம்மன் கோவிலில் எட்டாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, இன்று மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து 5 பெரிய மாட்டு வண்டிகளும், 8 சிறிய மாட்டு வண்டிகளும் கலந்துகொண்டன. இப்போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.