ரமலான் பண்டிகை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்களில் இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகை

May 17 2018 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரமலான் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்களில் இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியப் பெருமக்களின் புனித ரமலான் மாத நோன்பு, பிறை தெரிந்ததால் இன்று முதல் தொடங்கும் என, தமிழக அரசின் தலைமைக் காஜி டாக்டர் சலாவுதீன் முகமது அயுப் அறிவித்தார்.

இதனையொட்டி, சென்னை திருவல்லிகேணியில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில் திரளான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நள்ளிரவில் சஹர் எனப்படும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை ரமலான் தொழுகையும் நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா மற்றும் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில், இரவு முதலே சிறப்பு தொழுகைகள் தொடங்கின.

மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்பு தொழுகையில், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல், மேலூர், திருமங்கலம், சிலைமான், சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள், இரவு நேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00