கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் திருக்கோயில் : மலர்க் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட மலர்களைக் கொண்டு முருகப்பெருமானுக்கு மலா் அலங்காரம்
May 22 2018 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குறிஞ்சி ஆண்டவா் திருக்கோயிலில், மலர்க் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட மலர்களைக் கொண்டு, முருகப்பெருமானுக்கு மலா் அலங்காரம் மற்றும் மலா் வழிபாடுகள் நடைபெற்றது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த 19-ம் தேதி மலா் கண்காட்சியுடன், இந்த ஆண்டிற்கான கோடைவிழா தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் கோடைவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் ப்ரையண்ட் பூங்காவில் 57-ஆவது மலா் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான வண்ண மலா்கள், கொய்மலா்கள், தனியார் தோட்டங்கள், தங்கும் விடுதிகள், மலை கிராம விவசாயிகளால் வடிவமைக்கப்பட்ட மலா் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
மலா் கண்காட்சி நிறைவடைந்ததையடுத்து, கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான மலா்களைக் கொண்டு பழனி மலைக்கோயிலின் உபகோயிலான கொடைக்கானலில் அமைந்துள்ள அருள்மிகு குறிஞ்சி ஆண்டவா் கோயிலில் மலா் அலங்காரம் மற்றும் மலா் வழிபாடுகள் நடைபெற்றது. முருகப்பெருமான் மட்டுமன்றி திருக்கோயில் வளாகம் முழுவதும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. முருகப்பெருமான் ராஜஅலங்காரத்துடன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து, பக்தா்களுக்கு மலா்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. அன்னதானமும் வழங்கப்பட்டது.