புதுச்சேரி முத்தியால்பேட்டை புனித அந்தோணியார் ஆலய 158-ஆம் ஆண்டு திருவிழா : ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ பெருமக்கள் பங்கேற்பு
Jun 11 2018 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி முத்தியால்பேட்டை புனித அந்தோணியார் ஆலய 158-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடம்பர தேர் பவனியில், ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மிகவும் பிரசித்திப்பெற்ற புனித அந்தோணியார் ஆலையம் உள்ளது. இவ்வாலயத்தின் 158-ஆவது ஆண்டு திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவிழா நவநாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, தேர்பவனி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ணப் பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துகொண்டு மலர்தூவி அந்தோணியாரை பிரார்த்தித்தனர்.