காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கற்சிலைகள், கல்தூண்கள் காணாமல் போன சம்பவம் : 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
Jul 13 2018 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கற்சிலைகள் மற்றும் கல்தூண்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில். கி.பி., நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மிகப்பழ்அமையான இந்தக் கோவிலில் உள்ள இரட்டை திருமாளிகை சிதிலமடைந்துள்ளது. இதை புதுப்பிக்க கடந்த 2012 ஆண்டு 1 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகளும் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் கூறிய விதிகளையும் மீறி மன்னர்கள் காலத்தில் வடிவமைப்பு செய்யப்பட்ட கல் தூண்கள் மாற்றப்பட்டு உள்ளன. மேலும் சிலைகள் மாயமானதும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ம் ஏகாம்பரநாதர் திருகோவிலில் இரட்டை மாளிகையில் இருந்த சிலைகள் மற்றும் தூண்களை கடத்தப்பட்டுள்ளதாக டில்லிபாபு என்பவர் சிவகாஞ்சி போலிசாரிடம் புகார் கொடுத்தார். ஆனால் சிவகாஞ்சி போலிசார் புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாததால் டில்லிபாபு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து நீதிபதி மீனாட்சி, இந்த புகார் தொடர்பாக கூடுதல் திருபணி ஆனையர் கவிதா, இனை ஆனையர் சிவாஜி, உதவி ஆனையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன் பொறியாளர் பாலசுப்பிரமணியம் , நந்தகுமார் உள்ளிட்ட 6-பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிவகாஞ்சி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.