திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் : 6-ம் நாள் நிகழ்ச்சியாக தங்கத் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Sep 19 2018 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, 6-ம் நாள் நிகழ்ச்சியாக தங்கத் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 6-வது நாள் நிகழ்ச்சியாக, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து, உற்சவருக்கு தங்கத்தேரில் தூபதீப நைவேத்யம் நடத்தப்பட்டது. பக்தர்கள் வடம் பிடிக்க கோவில் மாடவீதிகளில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.