தூத்துக்குடி குலசேகரபட்டினம் தசரா திருவிழா: மஹிஷா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
Oct 19 2018 10:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்சியான மஹிஷாசூர சம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா
கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கோயில் கடற்கரை திடலில் அம்மன் இன்று நள்ளிரவு 12 மணிக்கு எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு விதமான வேடமணிந்து விரதம் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் வருகையையொட்டி சுமார் 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் விடப்பட்டுள்ளன.