குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கோலாகலம் - நள்ளிரவில் நடைபெற்ற மஹிஷாசூர சம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Oct 20 2018 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்தான் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்சியாக, அம்மன் மஹிஷாசூரனை வதம் செய்யும் மஹிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி நள்ளிரவு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் கோயில் கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார். எருது, சேவல் உள்ளிட்ட நான்கு உருவங்களில் வந்த மகிஷாசுரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.