தமிழகம் முழுவதும் மகா கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செந்தில் நாதனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை
Nov 9 2018 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் மகா கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செந்தில் நாதனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே தலம் திருச்செந்தூர் ஆலயமாகும். சூரபத்மனை வதம் செய்ய நெருப்புப் பிழம்பாக தோன்றிய முருகன், திருச்செந்தூரில் தன் படைகளுடன் தங்கியிருந்து சூரனை வதம் செய்ததாக புராண தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இத்தகு பெருமை வாய்ந்த திருச்செந்தூர் ஆலயத்திற்கு சஷ்டி விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.