ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிப்பு - கிறிஸ்துவ மக்கள் சிறப்பு பிரத்தனை
Apr 19 2019 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் புனித வெள்ளியையொட்டி இயேசுபிரானின் சிலுவைப்பாடுகளை விளக்கும் நிகழ்ச்சிகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இயேசு, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயேசுபிரான் பங்கேற்ற கடைசி இரவு விருந்து நிகழ்ச்சி பேராலய கலையரங்கத்தில் நடைபெற்றது. சீடர்களின் பாதங்களை கழுவும் நிகழ்வும் திவ்ய நற்கருணையும் ஆசீர் நிகழ்ச்சி நடைபெற்றன.
ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் சிலுவையினை சுமந்து சென்று துன்பகளை அனுபவித்ததான் இதனை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரிய சிலைப்பாதை நடைபெற்றது. ஏசு, சிலுவையை சுமந்துந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவ மக்கள் சிலுவையை சுமந்து தங்களை வருந்திக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் உள்ள புனித லூர்து சகாய அன்னை ஆலத்தில் இருந்து சிலுவை பாதை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றன. இதனை தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
தவ காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்று புனித வியாழனாகவும், இன்று புனித வெள்ளியாகவும் கடைபிடிக்கபட்டு வருகிறது. இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொது இடங்களில் மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கஞ்சி உணவாக வழங்கபட்டது. இதனை ஆட்டோ ஒட்டுனர்கள், பொது மக்கள் வாங்கி பருகி சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.