மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Aug 7 2019 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய கள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, கள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திருக்கோயில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் "கோவிந்தா, நமோ நாராயணா" என்ற கோஷத்துடன் ஆடிப் பெருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில் ஆடி திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு கொட்டும் மழையிலும், விடிய விடிய பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், உருவ பொம்மைகள் வைத்தும் மாரியம்மனை வழிபட்டனர்.