திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - கொடிமர பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Aug 20 2019 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடாக புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்படதுடன் முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதய மார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவிலில் இருந்து கொடிபட்டம் எடுத்துவரப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் மிக முக்கிய நிகழ்சியான திருத்தேரோட்டம் வரும் 29 ம் தேதி நடைபெற உள்ளது.