வீடுகளிலும் களைகட்டும் நவராத்திரி விழா : கொலு பொம்மைகள் வைத்து பெண்கள் வழிபாடு
Oct 3 2019 7:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி விழா, கோயில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் களைகட்டியுள்ளது. பலவிதமான பொம்மைகளை வைத்து பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் வழிபட்டு வருகின்றனர்.
திருப்பூர் அமர்ஜோதி கார்டன், ஆண்டிபாளையம் உட்பட பல்வேறு இடங்களில் நவராத்திரி விழாவையொட்டி, அப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள், தங்களது வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த கொலு கண்காட்சியில், மலேசியாவில் உள்ள பத்துமலை முருகப்பெருமான் காட்சி, தைப்பூச திருவிழா காட்சி, காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற மற்றும் சயன கோலம், தரையில் தவழும் நீலவண்ண குழந்தை கண்ணணின் அற்புத தோற்றம், பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் கொலுவில் அழகாக வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கும்மியாட்டம் மற்றும் தேவாரம், பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டன.