திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி
Oct 4 2019 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை, உற்சவர் மலையப்பசுவாமி, மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி மாதத்தில், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் 5-ஆம் நாளான இன்று, உற்சவர் மலையப்பசுவாமி, மோகினி அவதார திருக்கோலத்தில் மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளியுடன் கூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.