நவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்குச் இன்று முதல் அக்.8-ம் தேதி வரை செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி
Oct 5 2019 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொடர் மழை காரணமாக, சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்திருந்த நிலையில், நவராத்திரியை முன்னிட்டு, இன்று முதல் 4 நாட்கள், பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல, வனத்துறை அனுமதி அளித்து வருகிறது. இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு, கடந்த 29-ம் தேதி முதல் வரும் 8-ம் தேதி வரை, மொத்தம் 10 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளித்திருந்த நிலையில், தொடர் மழையால், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக. பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இந்நிலையில், சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால், நவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை, மொத்தம் 4 நாட்கள், பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது.