திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - திவ்ய தரிசனம் ரத்து
Oct 7 2019 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரமோற்சவம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதையொட்டி, திவ்ய தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி மலையப்பசுவாமி தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரமோற்சவம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, நாடு முழுவதும் இருந்து திருப்பதியில் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிக கூட்டம் காரணமாக இன்றுமுதல் வரும் 14ம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.