ஐப்பசி மாத துலா உற்சவம் : காவிரிக்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
Oct 18 2019 9:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐப்பசி மாத துலா உற்சவத்தை முன்னிட்டு காவிரிக்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில், காவிரியிலிருந்து தங்கக்குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
துலாம் மாத தொடக்கத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இருந்து தங்கக்குடம் எடுத்துவந்து, அம்மா மண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து புனிதநீர், கோயில் யானை ஆண்டாள் மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு நம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மா மண்டபம் காவிரிப் படித்துறையில் திரண்ட பக்தர்கள் காவிரியாற்றில் புனிதநீராடி நம்பெருமாளை வழிபட்டனர்.
ஐப்பசி மாதம் துலா உற்சவத்தை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், வெள்ளி ரிஷப வாகனத்தில், சுவாமி, அம்பாள், உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா மற்றும் காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வழிபாடு நடத்தினர்.