திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் - பக்தர்கள் வசதிக்காக 8 தற்காலிக தங்கும் இடங்கள் அமைப்பு
Oct 26 2019 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மறுநாள் கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 18 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மறுநாள் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் 6 நாட்களும் பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருப்பார்கள் என்பதால் 18 தற்காலிக இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.