திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா : யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடக்கம்
Oct 28 2019 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், 6 நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை 6 மணிக்கு, யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதும், விஸ்வரூப தரிசனமும், உதயமார்தாண்ட அபிஷேகமும் செய்யப்பட்டன. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வாணையுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். வேதமந்திரங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிக்ழ்ச்சியான சூரசம்ஹாரம், அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது.