கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் : நாளை மாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார விழாயொட்டி பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்
Nov 1 2019 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில், கடந்த 28-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் காணும் வகையில் கடற்கரை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.