சென்னை மடிப்பாக்கத்தில் ஸ்ரீ ஷிர்டி பைரவ சாயி திருக்கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
Nov 3 2019 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஷிர்டி பைரவ சாயி திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மடிப்பாக்கம் ஸ்ரீ ஷிர்டி பைரவ சாயி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, விமான கோபுர கலசத்தின் மீது ஊற்றி வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கருவறையில் உள்ள ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் சிலைக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.