அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெள்ளி ரதத்தில் பவனி : 7ம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம்
Dec 7 2019 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் இரவு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், வெள்ளி ரதத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் 6ம் நாளான நேற்றிரவு, அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் 16 கால் மண்டபத்தின் முன்பு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பழமை வாய்ந்த வெள்ளி ரதத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி, மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனிடையே, தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று, பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம் நடைபெறுகிறது.