பழனி முருகன் கோயில் கார்த்திகை மாத காணிக்கை ரூ.3.47 கோடி - 1,230 கிராம் தங்கம், 11,220 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன
Dec 14 2019 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், கார்த்திகை மாத காணிக்கையாக, 3 கோடியே 47 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலுக்கு, ஐயப்ப மற்றும் முருக பக்தர்களின் வருகையால், 32 நாட்களில் உண்டியல்கள் நிரம்பின. நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டதால், காணிக்கையை எண்ணும் பணியில், திருக்கோயில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பக்தர்களின் காணிக்கையாக, 3 கோடியே 47 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், ஆயிரத்து 230 கிராம் தங்கமும், 11 ஆயிரத்து 220 கிராம் வெள்ளியும் கிடைத்தன. இவை தவிர, நவதானியங்கள், பட்டாடைகள் உள்ளிட்டவைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.