நாகர்கோவிலில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது
Oct 29 2014 6:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
உடல் ஆரோக்கியத்துடன் உள்ள மாணவர்களுக்கு இணையாக, மாற்றுத்திறனாளி மாணவர்களும் விளையாட்டுத் துறையில் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், மாவட்டந்தோறும் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில், மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் பங்கேற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு, குண்டெறிதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.