பாலியல் பலாத்கார வழக்கில் கிரிக்கெட் வீரர் லாமிச்சன்னேவுக்கு 8ஆண்டு சிறை : குற்றவாளி என கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு
Jan 10 2024 7:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நேபாள நாட்டு நட்சத்திர கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சன்னேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காத்மண்டுவில் உள்ள ஓட்டல் ஒன்றில் 17 வயது சிறுமியை சந்தீப் லாமிச்சன்னே பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் சந்தீப் லாமிச்சன்னே விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு காட்மண்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி சந்தீப் லாமிச்சன்னே குற்றவாளி என நீதிபதி ஷிஷிர் ராஜ் தக்கல் அறிவித்தார். இந்நிலையில் இன்று சந்தீப் லாமிச்சன்னேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தக்கல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.