இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு : கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக பும்ராவும் நியமனம்
Jan 13 2024 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரை தொடர்ந்து, இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 25ம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட 4 சுழற்பந்து வீச்சாளர்களும், சிராஜ், முகேஷ் குமார், அவேஷ் கான் உள்ளிட்ட 4 வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.