புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் புதுச்சேரி மற்றும் கோவளத்தைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர்
Aug 25 2014 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் சர்வதேச அளவிலான அலைச்சறுக்குப் போட்டிகள் கடந்த 22ம் தேதி முதல் நடைபெற்றன. இந்த போட்டியில் ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், புதுச்சேரி, தமிழகம், மற்றும் கேரளாவிலிருந்தும் 70க்கும் மேற்பட்ட அலைச்சறுக்கு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த அலைச்சறுக்குப் போட்டி 3 சுற்றுகளாக நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில் சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் கோவளத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி, தரணி ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். சீனியர் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த ஜான் ரோபலும், மகளிர் பிரிவில் சுஹாசினியும் முதலிடத்தைப் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.