தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கைப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், நெல்லை மற்றும் தூத்துக்குடி கல்லூரிகள் வெற்றி
Sep 25 2014 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கைப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், நெல்லை மற்றும் தூத்துக்குடி கல்லூரிகள் வெற்றி பெற்றன.
நெல்லை சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி தூத்துக்குடியில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 31 கல்லூரிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திசையன்விளை மனோ கல்லூரியை 25-க்கு 14, 25-க்கு 13 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அணி, நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி அணியை 25-க்கு 12, 22-க்கு 25, 25-க்கு 20 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.