தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவில் பள்ளி மாணவிகளுக்கு இடையேயான கேரம் விளையாட்டு போட்டி - 150 பேர் ஆர்வமுடம் பங்கேற்பு
Oct 28 2014 7:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவில் பள்ளி மாணவிகளுக்கு இடையேயான கேரம் விளையாட்டு போட்டியில், 150 பேர் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர்.
மாணவ, மாணவிகளிடம் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டம், மண்டல மற்றும் மாநில அளவில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு இடையே மண்டல அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 150 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். 14, 17, 19 என்ற வயது அடிப்படையில் நடைபெற்ற போட்டியில், மாணவியர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.