இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை நடைபெறுகிறது
Jan 13 2020 7:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்படி, இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா, அணிக்கு திரும்பி உள்ளார். கேப்டன் விராட் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா, மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பி உள்ளார். கேப்டன் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில், பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்காம்ப், ஹேசல்வுட், ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.