ஹோபர் சர்வதேச டென்னிஸ் தொடர் : நாடியா - சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Jan 16 2020 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் Hobart சர்வதேச டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுக்குப்பின் முதன்முறையாக டென்னிஸ் போட்டியில் களமிறங்கியுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் Hobart சர்வதேச டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், உக்ரைனின் Nadiia Kichenok உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். காலிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் Vania King மற்றும் Christina McHale ஜோடியை, சானியா இணை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-2, 4-6 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.