பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டி - 200-க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்பு
Jan 16 2020 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் வாகரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பொங்கல் திருவிழாவையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாரத்தான் போட்டியில் வயது வாரியாக பந்தயங்கள் நடைபெற்றன. ஆடவருக்கும், மகளிருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பிடித்த வீரர் - வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.