கோடை சீசனுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் - ஐ.பி.எல். நிர்வாக ஆணைய கூட்டத்தில் முடிவு
Jan 28 2020 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நிர்வாக ஆணைய கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், ஐபிஎல் போட்டிகளை அரைமணி நேரம் முன்னதாக தொடங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், போட்டிகள் வழக்கம் போல இரவு 8 மணிக்கே தொடங்கும் என முடிவு செய்யப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கி, மே மாதம் 24 வரை நடத்தப்படும் என்றும், இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.