டெல்லியில் நடைபெறும் ஆசிய மல்யுத்த போட்டி - இந்திய வீரர் சுனில்குமாருக்கு தங்கம்
Feb 19 2020 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.
டெல்லியில் நேற்று தொடங்கிய போட்டியில் "கிரிகோ ரோமன்" 87 கிலோ எடைப்பிரிவின், அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார், கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை எதிர்கொண்டார். இதில், சுனில்குமார் 12-க்கு 8 என்ற புள்ளி கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இறுதிப்போட்டியில், கிர்கிஸ்தான் வீரர் அசாத் சாலிடினோவை சுனில்குமார் எதிர்கொண்டார். இதில் சுனில்குமார் 5-க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய மல்யுத்த போட்டியில் கடந்த 1993-ம் ஆண்டு பப்பு யாதவ் என்பவர் தங்கப்பதக்கம் வென்றார். தற்போது 27 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா இப்போட்டியில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.